Sunday, November 29, 2009

மின்வெட்டு

மின்வெட்டு தான் தலைப்பு,
சொல்லி முடித்தார் நடுவர்,
யாருக்கும் கேட்கவில்லை,
அரங்கில் மின்வெட்டு.

காவிரித்தாயின் கேள்வி

தவித்த வாய்க்கு தண்ணீர்  தரும் தமிழா,
தண்ணீர் என்னை வாய் தவிக்க விட்டது ஏனோ? 

Saturday, November 28, 2009

நான் சென்னை நகரம்
















நான்
சென்னை நகரம்,
தமிழ்த்தாயின் தலைப்புதல்வி
அவளோ அழகு மங்கலக்கோலத்தில்,
நானோ அறை குறை நிர்வாணத்தில்;

ஓசோன் படலத்தை உடைக்க துடிக்கும் கோபுரங்கள்,
அவை மறைத்திருக்கும் குடிசைகள் தான் என் மறுபுரங்கள்,
மெரினாவும் ஜார்ஜ் கோட்டையும் காட்டும் என் சரித்திரங்கள்,
கூவமும் அழுக்குக்குப்பமும் காட்டும் என் தரித்திரங்கள்;

குப்பைதொட்டிக்கு அருகில் கிழிந்த ஆடையுடன் பெண்,
ஸ்பென்சர் பிளாசாவுக்கு உள்ளேயும் கிழிந்த ஆடையுடன் பெண்,
அதுவோ இறைவன் விதித்த விதி,
இதுவோ நவநாகரிகத்தின் சதி















கடற்கரையை படுக்கையறையாக்கும் கலாச்சார புனிதர்கள்,
கருவறை முதல் கல்லறை வரை கழிவறையிலேயே வாழும் மனிதர்கள்;



















புத்தகப்பை
சுமக்கும் வயதில் கருப்பை சுமக்கும் சிறுமி,
மாஞ்சாக்கயிறு இழுக்கும் வயதில் கஞ்சா இழுக்கும் சிறுவன்;

கோவிலுக்கு அருகிலேயே விபசார விடுதிகள்,
கலவரம் என்று வந்தால் தெறிக்கும் குருதிகள்;

ஹீரோ ஆக இங்கே வந்து ஜீரோ ஆகும் அவலங்கள்,
நீரோ மன்னன் போல் எதையும் வேடிக்கை பார்க்கும் கேவலங்கள்;


கார்களிலும் டைடெல் பார்க்கிலும் பறக்கும் தமிழ்மகன்கள்,
பார்களிலும் டாஸ்மாக்கிலும் மிதக்கும் குடிமகன்கள்,
பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் அழகிய தமிழ்மகள்கள்,
கற்பை விற்கும் பதுமைப்பெண்ணாய் அங்கங்கே விலைமகள்கள்;

இயந்திரம் மனிதனாகும் முன்னே இங்கு மனிதன் இயந்திரம் ஆகிறான்,
சுதந்திரம் எதுவும் இன்றி இந்த வாழ்வே நிரந்தரம் ஆகிறான்;

வாசித்துப்பார்த்தால் நான் சிங்காரச்சென்னை,
யோசித்துப்பார்த்தால் நான் மனிதப்பண்ணை,

நான் தான் சென்னை நகரம்,
தமிழ்த்தாயின் தலைப்புதல்வி,
தமிழ்நாட்டின் தலை வலி...