Friday, February 14, 2014

காதலி

காதலி

ஒவ்வொரு பெண்ணும் அழகாவது,
ஒருவன் காதலி ஆகும் போது தான்;

ஒவ்வொரு ஆணும் கவிஞன் ஆவது,
ஒரு காதலியால் தான்

காதலி

அவள் சிணுங்கலை கேட்டுப்பார்,
குழந்தை கூட அவள் மழலையில் தோற்றுப் போகும்

அவள் மடியில் படுத்துப்பார்
தாயின் மடி கூட ஒரு நொடி மறந்து போகும்

அவள் அரை நொடி புன்னகைக்காக
பகல் முழுதும் காத்திருப்பாய்
அந்த சிரிப்பை நினைத்துக் கொண்டே
இரவெல்லாம் விழித்திருப்பாய்

சாய்வதற்கு தோளைத் தந்தால் உன்னிடம் மட்டுமே கண்ணீர் விடுவாள்

நெற்றி நிறைய முத்தம் தந்தால்
உனக்கு மட்டும் அழகாய் சிரிப்பாள்

பட்டாம்பூச்சியை சிறை பிடிப்பாய், அவள் கையில் விடுதலை பெறுவதற்காக

எறும்பைக் கூட கொலை செய்வாய் ,
அவளை கடித்த குற்றத்திற்காக

அலைகளும் உனக்கு நன்றி சொல்லும்,
அவள் ஸ்பரிசம் தொட அனுமதி தந்தால்

காற்றும் உனக்குள் இடம் கேட்கும்,
உன் சுவாசத்தில் அவளே வசிப்பதால்...

தோல்வியைக் கூட கொண்டாடுவாய்,
அவளுக்காக தோற்றுப் போனால்

கண்ணீரும் கூட இன்பமாகும்
அவளுக்காக அழும் போது

உயிரைக்கூட நீ வெறுப்பாய்
அவள் உன்னை வெறுக்கும் போது

சாவும் கூட பிடித்து போகும்,
அவளுக்காக நீ இறந்தால்.

காதலி

அவள் விதிகளுக்கு அப்பாற்பட்டவள்
புதிர்களுக்கு பழக்கப்பட்டவள்

சில நாட்கள் சிரிப்பை தந்து பின் பல நாட்கள் கண்ணீர் தருபவள்

கனவுகளை கண்ணில் தந்து விட்டு
நினைவுகளோடு நீங்கிச் செல்பவள்

காதலி

அவள்,
காதல் என்னும் மருந்தைத் தந்து - பின்
தனிமை என்னும் நோயைத் தருபவள்